திருவாரூர் இடைத்தேர்தல் அதிரடி இரத்து.! வெளியான அதிகாரபூர்வ தகவல்.!!
thiruvarur by election post-pend by election comity
திருவாரூரில் வரும் 28 ம் தேதியன்று இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையமானது அறிவித்திருந்தது. கஜாப்புயல் தாக்கத்தில் இருந்தே இன்னும் அங்குள்ள மக்கள் மீண்டு வராத நிலையில்., இடைத்தேர்தல் அறிவிப்பானது அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும்., தற்போது இடைத்தேர்தலை வைத்தால் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பணிகள் வழங்கப்படுவது பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது., இதனை அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்., சனிக்கிழமை திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தலாமா? என்று மாவட்ட ஆட்சியர் அங்குள்ள அரசியல் கட்சியினர் கேட்டபோது., அனைவரும் தேர்தலை ஒத்தி வைக்கக்கூறினர்.
இந்நிலையில்., இன்று காலையில் இந்திய தேர்தல் ஆணையமானது திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து கட்சியினரும் (அதிமுகவை தவிர) தங்களின் வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில்., தேர்தல் இரத்து செய்யப்பட்ட சம்பவமானது சில கட்சியினரிடம் வரவேற்பையும்., சில கட்சியினரிடம் எதிர்ப்பையும் உள்ளாகியுள்ளது.
English Summary
thiruvarur by election post-pend by election comity