அதிமுக கட்சியினருக்கு தைரியம் இருக்கிறதா?.! கொந்தளித்து கொலைகாண்டில் தடாலடியாக பேட்டியளித்த தங்கதமிழ்ச்செல்வன்.!!
ThangaTamilselvan speech in dindukal meeting about admk parliament election
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக்கத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டமானது திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் வருகை தந்திருந்தார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது.,
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சியுடன் பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு வரும் மே மாதம் வரை அவகாசம் இருக்கிறது.
பெரும்பான்மை ஊடங்கங்கள் இதனையே தொடர்ந்து பெரிதுபடுத்திக்கொண்டு வருகின்றனர்., திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் நடத்தும் அனைத்து ஊராட்சி சபை கூட்டங்களிலும் பொதுமக்களுக்கு பதிலாக கட்சியின் தொண்டர்களை வைத்து கூட்டம் நடத்தி கொண்டு வருகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அமைச்சர் ஜெயக்குமார் லெட்டர்பேடு கட்சி என்று கூறி வரும் நேரத்தில் தான்., குக்கர் சின்னத்தை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று வருகின்றனர். அவர்களுக்கு தைரியம் இருந்தால் குக்கர் சின்னத்தை எதிர்த்து தேர்தலில் களம் கண்டு வெற்றியடையட்டும்., அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட்டை இழந்து விடும் என்று தெரிவித்தார்.
English Summary
ThangaTamilselvan speech in dindukal meeting about admk parliament election