இவர்கள் தான் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம்!! தம்பிதுரை அதிரடி!! - Seithipunal
Seithipunal


கரூர் அருகே சணப்பிரட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்த கீதா மணிவண்ணன். எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'தமிழக அரசு மக்களின் தேவைகளை அறிந்து, அதனை பூர்த்தி செய்வதற்காக தான் இருக்கிறது. நான் கரூர் தொகுதியில் எம்.பி.யாக இருக்கிறேன். 

மீண்டும் நான் கரூர் தொகுதியில் போட்டியிடவே விருப்ப மனு கொடுத்துள்ளேன். அதிக தொகுதிகளை கொண்ட கட்சி தான் நாட்டின் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யும். இதை முடிவு செய்யும் சூழல் தி.மு.க.வுக்கு இல்லை.

தமிழகத்தில் தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது. உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்கிறாரே தவிர, பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அல்ல. இந்த நாட்டின் பிரதமர் யார் என சொல்லும் அளவுக்கு தி.மு.க.விற்கு தகுதி இல்லை. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட காரணமே தி.மு.க. தான். அவர்கள் மீது கொடுத்த தொடர் வழக்கு காரணமாக தான் மனஉளைச்சல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டர்.

எனவே ஜெயலலிதா இறப்புக்கு காரணமான தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்' என துணைசபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thambidurai says who reason of Jayalalithaa dead


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->