தொடர்ந்து 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.! அதிகாரப்பூரவ அறிவிப்பு.!!
tasmac shop employees strike
தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் மதுபான கடைகளால் தான் (டாஸ்மாக்) தமிழகத்தில் நடக்கும் பாதி குற்ற சம்பவங்களுக்கு காரணம் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றது. மேலும் இந்த டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளில் தினமும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஒருபக்கம் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், இந்த மதுபான கடைகளுக்கு ஆதரவும் இருந்துதான் வருகிறது. தற்போது தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர் என்று கைகாட்டப்படும் முக ஸ்டாலின் அவர்கள் கூட மதுபான கடைக்கு எதிராக கண்டனம் மட்டுமே தெரிவிக்கிறார். பூரண மது விளக்கு கொண்டு வர எந்த கொள்கை முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.
யாரை சொல்லியும் குற்றமில்லை, தமிழக அரசின் முக்கிய வருமானவே இந்த டாஸ்மாக் கடைகள் தான். இதனை மூடிவிட்டால் தமிழக அரசு இயங்காது என்று தமிழக அமைச்சர்களே தெரிவித்து வருகின்றனர். ஒரு நாள் டாஸ்மாக் கடை இயங்காவிட்டால் தமிழக அரசுக்கு பல கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு ஏற்படும்.
இப்படி இருக்க வரும் 8,9 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரிடம் வேலைநிறுத்த நோட்டீஸை கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் ராஜவேல் தெரிவிக்கையில், ''கடந்த 2003 ஆம் ஆண்டுடாஸ்மாக் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது தொடர்பாக பலமுறை தமிழக அரசிடம் முறையிட்டும், தமிழக அரசு அதற்கான எந்த பதிலையும் தரவில்லை.
இதனையடுத்து, வரும் 8.9 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதிலும் உள்ள 6,000 டாஸ்மாக் கடைகள் மூடி,வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்த போராட்டத்தில்,டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 27000 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த போராட்டத்தில் 11 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளது'' என்றும் ராஜவேல் தெரிவித்துள்ளார்.
English Summary
tasmac shop employees strike