நாகையில் தமிழக முதலமைச்சர்.!!
நாகையில் தமிழக முதலமைச்சர்.!!
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நாகப்பட்டினம்., திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோர தாண்டவம் ஆடிய கஜாபுயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீண்டு வரவில்லை.
இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து., விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து., வரும் காலத்தில் எந்த வேலை செய்து பிழைக்கப்போகிறோம் என்ற கவலையில் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம்., தன்னார்வலர்கள் மற்றும் உதவிமனப்பான்மை கொண்டவர்கள் செய்து வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தற்போது தமிழக முதல்வர் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்க செல்கிறார். அந்த வகையில்., புயல் பாதித்த இடங்களை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து காரைக்கால் விரைவு இரயில் மூலமாக நாகபட்டினத்தை சென்றடைந்தார். அங்கு வைத்து கஜாப்புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
English Summary
TAMILNADU CM IS NOW ON NAGAPATINAM.