கேக்குறவன் கேனப்பயலா இருந்தா, எறும்பு கூட ஏரோப்பிலேன் ஓட்டுதுனு ஸ்டாலின் சொல்வார்! பழனிசாமி அதிரடி பேச்சு!!
Tamilnadu CM Edapadi K Palanisami Talk Kodanadu
கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை காட்டுப்பாக்கத்தில் நேற்று இரவு எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
கோடநாடு விவகாரத்தில் சயானுக்கு திமுகவினர் தான் ஜாமீன் எடுத்துக் கொடுத்துள்ளனர். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடநாடு விவகாரத்தில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது, எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீதே, பொய் வழக்கு போடும் திமுக, ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்? என்று தமிழக மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
மேலும், கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
English Summary
Tamilnadu CM Edapadi K Palanisami Talk Kodanadu