அதிமுகவின் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற  அவர்கள் இருக்கிறார்கள்! அவங்க இருக்கற வரை எனக்கு எந்த பயமும் இல்லை! முதல்வர் பழனிச்சாமி அதிரடி பேட்டி!!    - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக  பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 2000 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

இதையடுத்து  மதுரை பாண்டிகோவில் சுற்றுசாலை பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது  முதல்வர் பேசியதாவது, ரூ 1000 பொங்கல் பரிசு தந்தோம் என்பதற்காக எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்.  அதிமுக  அரசையும், கட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள், பொதுமக்கள் எப்போதும் எனக்கு துணை நிற்பார்கள். பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு உள்ளவரை எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது. எதிர்கட்சியினர் வேண்டுமென்றே பொய் புகாரை என் மீது சுமத்தி வருகின்றனர். எப்படியாவது இந்த ஆட்சியை கலைக்க எதிர்கட்சிகள் எண்ணுகிறது. அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. மக்கள், தொண்டர்களின் முழு ஆதரவு அதிமுகவிற்கு உண்டு.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Chief Minister Talk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->