தொடர்ந்து நம்பும் தம்பிதுரை!! ஏமாற்றப்படுவாரா..!!?
தொடர்ந்து நம்பும் தம்பிதுரை!! ஏமாற்றப்படுவாரா..!!?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாமக,திமுக உள்ளிட்ட எதிர் காட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க அனைவரும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரையிடம் இதைப்பற்றி கேள்வியெழுப்பப்பட்டது,அதற்கு பதிலளித்த அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் பிரதமர் பரிசீலனைசெய்வார் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இரண்டு வார காலம் அவகாசம் உள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் இதற்காக ராஜினாமா செய்யத்தேவை இல்லை எனவும் ஐந்து ஆண்டுகளுக்கு சேவைசெய்ய தான் தங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக பதிலளித்தார்.
ஏற்கனவே 4 வார காலம் முடிந்துவிட்ட நிலையில் தொடர்ந்து நம்பும் தம்பிதுரையின் நம்பிக்கை சரியானதா? அல்லது ஏமாற்றம் தான் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
English Summary
tambithurai trusting continuesly..