ராகுல் கட்டிப்பிடித்தது இதற்காக கூட இருக்கலாம்,உடனே பரிசோதனை செய்யுங்கள்.,புதிய சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணிய சுவாமி.! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி பிரதமா் நரேந்திர மோடியை  கட்டிஅணைக்கும் போது அவரது உடலில் விஷ ஊசி போட்டிருக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி புது சர்ச்சையை கிளப்பி உள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி மக்களவையில் நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வந்தது. இந்த தீா்மானம் மீதான வாக்குவாதம் நேற்று பாராளுமன்ற மக்களவையில் நடைபெற்றது.

அதில் ராகுல் காந்தி பேச்சை பாஜகவுக்கு எதிராக காரசாரமாகப் பேசி முடித்த பின்னர் பிரதமர் மோடி இருக்கும் இடம் சென்று  அவரைக் கட்டி அணைத்தார்.  

மோடியும் சிரித்தபடியே  அவரது முதுகை தட்டி கொடுத்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தன்  இருப்பிடத்திற்கு சென்ற ராகுல் ,மோடியை பார்த்து கண்ணடித்தார்.

subramaniya swamy க்கான பட முடிவு

இந்நிலையில் பாஜககட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இது தொடா்பாக தன் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“பிரதமா் மோடி, ராகுல் காந்தியை கட்டியணைக்க அனுமதித்திருக்கக் கூடாது. ரஷ்யா்களும், கொரியா்களும் விஷ ஊசி செலுத்தி தங்கள் எதிரிகளை வீழ்த்த இந்த முறையைதான் பயன்படுத்துவார்கள்,எனவே மோடி உடனடியாக மருத்துவசிகிச்சை செய்து சுனந்தா கையில் உள்ளது போல நுண்ணிய துளைகள் எதுவும் உள்ளதா என பரிசோதனை செய்வது நல்லது என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷ ஊசி செலுத்தப்பட்டு இறந்தார் என்பதை சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டு கூறியுள்ளார். 
 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

subramaniya swami new controvacy against ragul hugged modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->