வேதாந்த நிறுவனத்திற்கு மரண அடி.! சற்றுமுன் உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு.!!
sterlite issue last judgment date announcement
தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த வருடம் மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தவழக்கில், பசுமை தீர்ப்பாயம், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது எனவும், சில கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்'' என்றும் உத்தரவு பிறப்பித்தது.
ஆலை மீண்டும் திறப்பதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் செய்து வந்தனர். இதற்கிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்து. ஆலையை திறக்க இடைக்கால தடை விதித்தது. இதன் பிறகு, ஸ்டெர்லைட் ஆலை செயல்பட பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த கூறி வேதாந்த நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.
இதில், சற்றுமுன் வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ஆலையை உடனே திறக்க உத்தரவிட வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது. ஜனவரி 29க்கு இந்த வழக்கின் ஒத்திவைத்தது. மேலும், இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 29ல் முடித்து வைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும் என்றும், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி ஆட்சியர் திறக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
sterlite issue last judgment date announcement