காத்திருந்து காத்திருந்து.... ! சந்தேகமடைந்த திருமாவளவன் புலம்பல்! திமுக சதித்திட்டமா?
so far election commission not allotted symbol to vck
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தனிதொகுதிகளையும் திமுக ஒதுக்கியது. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலுடன் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், விடுதலை சிறுத்தை கட்சி வரும் மக்களவை தேர்தலில் மூன்று மாநிலங்களில் போட்டியிடுகிறது. ஆந்திரா, கேரளா மாநிலங்களில், 9 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில், ஆந்திராவில் 6 தொகுதி, கேரளாவில் 3 தொகுதி அடங்கும்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் சிதம்பரத்தில் திருமாவளவன் தனிச்சின்னத்திலும், விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதால் அவர் விசிக உறுப்பினராக போட்டியிட முடியாது. மாறாக அவர் திமுகவின் உறுப்பினராக இணைந்தால் தான் போட்டியிட முடியும் என கூறப்படுகிறது. அதனால் அவர் திமுகவில் இணைவார் என தெரிகிறது.
இந்நிலையில் இதுவரை தனிசின்னம் கேட்டு நிற்கும் திருமாவளவனுக்கு விசிக கட்சிக்கு தனிசின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. அதேவேளையில் சீமான் கட்சி, வாசன் கட்சிக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. விசிகவிற்கு இன்னும் ஒதுக்கவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன் எனக்கு சின்னம் கிடைப்பதில் அரசியல் குறுக்கிடு இருக்கலாம் என சந்தேகிக்கிறார். தொகுதி உடன்படிக்கையின் போதே திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுருத்தப்ட்டதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் விதமாக ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றார். ஒருவேளை திருமாவளவனும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நெருக்கடி கொடுக்க்படுகிறதா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்திருக்குமோ!
English Summary
so far election commission not allotted symbol to vck