தேர்தல் நேரத்தில் தூக்கம் இல்லாமல், கிராமம் கிராமமாக ஓடும் ஸ்டாலின்!
sellur raju says about mk stalin
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். அப்போது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியவை, தேமுதிக எங்களுடன் வருமா? வராதா? என்று குழம்ப வேண்டாம். நல்லதையே நினைப்போம். தேமுதிக ஒரே நேரத்தில் அதிமுக, திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை திமுக நிர்வாகி கொச்சைப்படுத்தியது தவறு. தேமுதிகவுக்கு அதி முக கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை என கூற முடியாது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே இன்னும் கால அவகாசம் இருக்கிறது.
அரசியலில் ஒருவரை மிரட்டி எல்லாம் கூட்டணி வைத்து விட முடியாது. நாங்கள் அமைத்துள்ளது மக்கள் விரும்பும் கூட்டணி. தேர்தல் களத்தில் தாயில்லாத பிள்ளைகளாக நிற்கிறோம். மக்கள்தான் தாயாக இருந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். ஜெயலலிதா இருந்த போது தனித்து நின்று 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இன்றைய நிலைமை அப்படி இல்லை. எங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தாலும் இன்றையை அரசியல் சூழ்நிலைக்கு கூட்டணி தேவைப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது ஆயிரம் ரூபாய் கொடுத்ததும், இப்போது 2 ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதும் தேர்தலை நோக்கித்தான் என்று எதிர்க்கட்சிகள் கூறிவருவது தவறு. அதிமுகவின் மக்கள் நல திட்டங்களை கண்டு ஸ்டாலின் தூக்கம் இல்லாமல் தவிர்த்து வருகிறார். அதனால்தான் கிராமம் கிராமமாக ஓடுகிறார் என்று கூறினார்.
English Summary
sellur raju says about mk stalin