சற்றுமுன் நடைபெற்று வரும் சோதனை! திமுக தீவிரப்படுத்தும் குட்கா வழக்கில் திமுக பிரமுகரே சிக்குகிறாரா?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கு. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அடிக்கடி சோதனை, அதனை தொடர்ந்து டன் கணக்கில் குட்கா கைப்பற்றபடுவதும் தொடர்ந்து  சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

மேலும் இந்த ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வழக்குகளையெல்லாம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறது, இந்நிலையில் இந்த வழக்கில் திமுக பிரமுகரின் நண்பரே சிக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது நிச்சயம் திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் திமுகவில் இணைந்தார். இவர் தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உணவு வழங்கல் அலுவலர், செந்தில்பாலாஜி நண்பரான கொங்குமணியின் கடைகள், வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். 

கடந்த வாரம் நடைபெற்ற சோதனையின்போது 14 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து மணியின் வீட்டிலும் கடைகளிலும் கோவை ரோடு, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் கரூரில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜியால் திமுகவிற்கு  சிக்கல் உருவாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raid in kongu mani residence close friend of senthil balaji


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->