திமுகவை எதிர்த்து ராகுல்காந்தி வெளியிட்ட அறிவிப்பு.! பெரும் குழப்பத்தில்  தமிழக மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழ் இன மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் முதல், நடிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் வரை தமிழ் இன மக்களுக்கு தங்களின் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்திலும் தமிழ் புத்தாண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களும் தமிழ் இன மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பல அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக, இந்தியாவின் முதல் குடிமகன், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

இப்படியாக உலகின் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டு இருக்க, அவர்களுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காமல் திமுக தலைவர் முக ஸ்டாலின், அவர் கூட்டணியில் இடம்பெற்று உள்ள வைகோ, திருமாவளவன், கம்னியூஸ்ட் கட்சி தலைவர்கள் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை.



 

அதே சமயத்தில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பாக, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழ்த்து தெரிவிக்கும் போது, இவர்களுக்கு என்ன? என்று சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்கள் ஸ்டாலினுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது என்ன கூட்டணியோ என்று உடன்பிறப்புகள் தலையில் அடித்து கொள்கின்றனர்.

கடந்த 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு தை ஒன்று தான் என்று அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசாணை வெளியிட்டது. ஆனால் தமிழர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முகத்தில் கரியை பூசிய தமிழர்கள், சித்திரை ஒன்றையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடினர். ஏன் உடன்பிறப்புகளின் குடும்பங்களிலும் சித்திரை ஒன்றே தமிழ் புத்தாண்டாக கொண்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகில் வாழும் அனைத்து மக்களும் சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டாக கொண்டாட, புதிதாக இவர்கள் கூறினால் மாறிவிட உலகில் வாழும் தமிழ் சமுதாயம் இவர்களின் கைப்பாவைகள் என்று நினைத்து விட்டார்கள் போலும். இதனை இலங்கையில் உள்ள தமிழர்களிடம் சென்று தமிழ் முதல் மாதம் சித்திரை அல்ல தை என்று கூறினால் சிரிப்பார்கள். என்றும் நெட்டிசன்கள் திமுகவை கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAHUL WISH TO TAMIL PEOPLE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->