மோடிக்கு எதிராக நாளை நடக்கவிருக்கும் போராட்டம்.! ராகுல்காந்தி வெளியிட்ட அறிவிப்பு.!!
ragul gandhi support mamtha banarji strike in kolkatha
இன்னும் மூன்று மாதத்திற்கு பின்னர் பாராளுமன்ற தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் தற்போது நடைபெறும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை வீழ்த்தும் நோக்கில்., வெவ்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் நினைக்கும் வேளையில்., அந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைக்க பல அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாளை கொல்கத்தாவில் சுமார் 30 இலட்சம் மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணியானது நடைபெறுகிறது. இந்த பேரணியில் பல கட்சிகளின் தலைவர்கள் ஓரணியில் இணைகின்றனர்.
தற்போது இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி ஆதரவு அளித்து தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி., மேற்கு வங்காளத்தின் முதமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில்., மதங்கள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்த தனி மனிதனும்., குழந்தைகளுக்கு மதிப்பளித்து நாளைய இந்தியாவை உருவாக்க சக்தி வாய்ந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்று கூடியுள்ளது. பாராளுமன்ற ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாரத பிரதமர் மோடி அளித்த போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றத்தை சந்தித்த அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
மோடியின் அரசு ஜனநாயகத்தை காப்பதாக கூறி தொடர்ந்து ஜனநாயகத்தின் தூண்களை அழித்து கொண்டு வரும் நிலையில்., சமூக நீதி மற்றும் மதசார்பின்மை பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று என்ற கோட்பாட்டின் மூலம் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வரவுள்ளது. இதற்க்காக நாளை ஓரணியில் திரளும் கட்சிகளுக்கும்., மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் பேரணிக்கும் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
English Summary
ragul gandhi support mamtha banarji strike in kolkatha