பா.ஜ.க தலைவர்களே.. ஏசி அறையில் இருந்து வெளியே வந்து மக்களின் கஷ்டத்தை பாருங்க! பா.ஜ.க.வை கிழித்து தள்ளிய பிரபல நடிகர்!
prakash raj says bjp leaders
அயோத்தியின் வீதிகளில் ஏழை மக்கள் படும் அவதியையும், என்ன சூழலில் வாழ்கிறார்கள் என்பதை பார்க்குமாறு பாஜக தலைவர்களை, நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது பெங்களூரு தொகுதியிலிருந்து நடைபெற உள்ள நாடாளமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் பிரகாஷ் ராஜ். அப்போது அவர் கூறியவை, அயோத்தியை வைத்து ஏசி அறைகளில் அமர்ந்து அரசியல் நடத்துகின்றனர். முதலில் அயோத்தியின் தெருவில் வந்து ஏழை மக்கள் எப்படி மோசமான சூழலில் வாழ்கிறார்கள் என்று பாஜக தலைவர்கள் பார்க்கட்டும்.
இந்தியாவில் இனி எந்த ஒரு தனிப்பெரும் கட்சியும் முழு அளவு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க போவதில்லை. ஒவ்வொரு மாநில அரசியல் கட்சியும் மத்தியில் செல்வாக்கு பெற முயற்சித்து வருகிறது. பாஜக, கர்நாடக அரசியலில், ஆட்சியில் இல்லாத போதும், ஆட்சிக்கவிழ்ப்பு வேலையில் முழு வீசியில் ஈடுபட்டு வருவதாக பிரகாஷ்ராஜ் கூறினார்.
English Summary
prakash raj says bjp leaders