எதிர்க்கட்சி எம்எல்ஏ தகுதி நீக்கம்! சிறையிலும் அடைப்பு! சபாநாயகர் அதிரடி உத்தரவு! அரசியலில் திடீர் பரபரப்பு!
எதிர்க்கட்சி எம்எல்ஏ தகுதி நீக்கம்! சிறையிலும் அடைப்பு! சபாநாயகர் அதிரடி உத்தரவு! அரசியலில் திடீர் பரபரப்பு!
சற்றுமுன் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அசோக் ஆனந்த் தனது பதவியை இழந்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அசோக் ஆனந்த். அவர் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் அவர் குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து நீதிபதி அவருக்கு தண்டனை அளித்திருந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து அவருடைய பதவி பறிபோனதாகவும், அவருடைய தொகுதி காலியானதாக அறிவித்துள்ளார். அவர் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தற்போது எதிர்கட்சியாக யுள்ள என் ஆர் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறை செல்வதுடன் எம்எல்ஏ பதவியை இழந்ததால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.
English Summary
pondichery mla dismissed by speaker