8 வழி பசுமைச்சாலை விவகாரத்தில் புதிய சர்ச்சை..! முதல்வர் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதா? பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி.!!
8 வழி பசுமைச்சாலை விவகாரத்தில் புதிய சர்ச்சை..! முதல்வர் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதா? பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி.!!
சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி பசுமைச்சாலை அமைய உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர்களிடத்திலிருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது, இந்நிலையில் இந்த 8 வழி பசுமைசாலை பணியில் முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர்கள் கொடுக்கப்பட்டுட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
இது பற்றி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, முதலமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் கிளம்பி உள்ளது, இது பற்றி முதல்வர் தான் விளக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 16 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அறிவிக்கும்போது கடும் எதிர்ப்புகள் வருகிறது. மக்களுக்கு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருக வேண்டும், அதனால் ஒரு சிலவற்றை ஏற்றுகொண்டு தான் ஆக வேண்டும்.
8 வழி பசுமைச்சாலை பணியை மேற்கொள்ள முதலமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் கிளம்பி உள்ளது. இதுபற்றி முதலமைச்சர் தான் விளக்கம் அளிக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். அப்போது தான் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் நன்மைகளை மக்கள் அறிந்துகொள்வார்கள், இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
pon radhakirushnan says chief minister only explain the 8 way road tender