போலீசார் உடையில் தீவிரவாதிகள்..! பொதுமக்களும் தீவிரவாதிகள்..!! சேம் சைடு கோல் பொன் ராதா..!!! - Seithipunal
Seithipunal


எப்போதுமே, எந்த செய்தியானாலும், முந்திக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். மாநில அரசாங்கத்தைப் பற்றியோ, மத்திய அரசாங்கத்தைப் பற்றியோ யார் விமர்சனம் சொன்னாலும், தமிழிசையை முந்திக் கொண்டு இவர் கருத்து சொல்வார்.

அவருடைய பேட்டிகள் எல்லாம் ஆளும் கட்சிக்கு சாதகமாகத் தான் இருக்கும். மத்திய அரசின் ஆதரவில், தமிழ்நாடு அரசு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது, என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

அதனால், தமிழகத்தில் ஆட்சி முறை, விலைவாசி உயர்வு பற்றிக் கேட்டால், பட்டும் படாமலும் பதில் சொல்வார், பொன். ராதாகிருஷ்ணன். இவருடைய கருத்துக்கு நேர் மாறானதாக, தமிழ்நாடு பாஜக. தலைவர், தமிழிசை சௌந்தர்ராஜனின் பேட்டி இருக்கும்.

ஆனால், இன்று, பொன். ராதாகிருஷ்ணன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, துாத்துக்குடி சம்பவம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப் பட்டது. 

அதற்கு அவர், “ தமிழகத்தில் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர், என்று சொல்லியும், தமிழக அரசு, இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துாத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்திலும், அந்த தீவிரவாதிகள் கலந்து உள்ளனர். அதைக் கண்டறிய வேண்டும்.

எனக்கென்னவோ, தமிழக காவல் துறையிலும், தீவிரவாதிகள் நுழைந்து விட்டார்களோ, என்ற சந்தேகம் தோன்றுகிறது” என்று கூறி உள்ளார். இவரது பேட்டி, ஆளும் தரப்பினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது, என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

POLICE AND PUBLIC ARE TERRORIST BJP PON RATHA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->