மோடிக்கு ராக்கி கட்டிய சிறுமிகள்.. பதிலுக்கு பிரதமர் கொடுத்த பரிசு இதுதான்.! - Seithipunal
Seithipunal


ரக்ஷா பந்தன் விஷயத்தை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு சிறுமிகள் ராக்கி கட்டினர். அந்தச் சிறுமிகளுக்கு மோடி மூவர்ண கொடியை பரிசாகக் கொடுத்து மகிழ்வித்தார். 

பிரதமர் அலுவலகத்தில் பல்வேறு விதமான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் இன்று ரக்ஷா பந்தன் விழாவில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டனர். அப்போது மோடிக்கு அந்த சிறுமிகள் ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அந்தச் சிறுமிகளுக்கு மூவர்ணக் கொடி களை பரிசாக வழங்கினார். 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm Modi Gifted national flag To Girls


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->