வாய் திறக்கவே முடியாத அளவிற்கு, சும்மா வெளுத்து வாங்கிய விஜயன்.!! இளம் தலைமுறை மத்தியில் ஹீரோவாக.. - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் இடதுசாரிகளால், பாஜகவினர் தொடர்ந்து கொல்லப்படுவதாக கூறி, பாஜக-வினர் ‘ஜன் ரக்ஷா’ யாத்திரையை நடத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும்..

இந்த யாத்திரையை பாஜகதேசியத் தலைவர் அமித்ஷாவே, கடந்த 3-ஆம்தேதியன்று கண்ணூருக்கு நேரில் வந்து தொடங்கி வைத்தார்.

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கேரளா வந்து சென்றார். மக்கள் ஆதரவு இல்லாததால் பாஜக நடத்திய யாத்திரை புஸ்ஸாகிப் போனது.

எனினும், இந்த யாத்திரையின் நிறைவு விழா என்றபெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

அப்போது, கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசையும், முதல்வர் பினராயி விஜயனையும் கடுமையாக விமர்சித்தார். வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதால் மக்கள்இடதுசாரிகளை கேரளாவில் இருந்து தூக்கியெறியும் நிலை வெகுதூரத்தில் இல்லை என்றும்,

இடது சாரிகள் பாஜகவுடன் மோத விரும்பினால், வளர்ச்சி மற்றும் சித்தாந்த ரீதியில் முடிந்தால் மோதுங்கள் என்றும் வேதம் ஓதிவிட்டு போனார்.

இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக-விடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலமும் வளர்ச்சி குறியீட்டில் கேரளா பெற்றுள்ள சர்வதேச தரத்தை எட்டவில்லை;

மதச்சார்பற்ற கொள்கைகளால் எனது இதயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாஜக வெறுப்பு மற்றும் மத சித்தாந்தங்களை மட்டுமே கொண்டுள்ளது என்று பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pinarayi vijayan answer against amithsha about yathraa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->