சற்றுமுன் வெளியான தகவல்.! மக்களவை தேர்தல் தேதியை அறிவிக்கும் தேதி வெளியானது.!!
PARLIAMENT ELECTION DATE ANNOUNCEMENT DATE
வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.
பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் பாஜக மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பலமான ஒரு கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரவ் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் பேசிக்குவார்த்தை நடத்தி வருகிறார்.
ஏப்ரல் மாதம் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளதாகவும், மொத்தம் பத்து கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் முடிவடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தேதியும் வாட்ஸ் அப் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் வதந்தி பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதி குறித்து மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
PARLIAMENT ELECTION DATE ANNOUNCEMENT DATE