நள்ளிரவில் நடந்த அதகளம்.! தினகரனுக்கு கூட்டணி அழைப்பு?! ஓபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!!
ops tweet about alliance
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என்று அரசியல் விமர்சகர்களும், அரசியலை உற்று நோக்கும் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சமீப காலமாக அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பல செய்து வந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும் அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் பாஜக-வுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பதை அவர்களின் பேட்டிகளிலேயே காணலாம். குறிப்பாக துணை சபாநாயகர் தம்பிதுரை ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 25 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் பாஜக நிச்சயம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் அதற்குண்டான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலைமை இப்படி இருக்க வரும், நேற்று இரவு தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் அவர்கள், ''கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; பேச்சுவார்த்தை தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ஓபிஎஸ் அவர்களிடம், இதனை தினகரனுக்கான அழைப்பாக எடுத்து கொள்ளலாமா என்று கேட்க, அதற்கு ஓபிஎஸ் அவர்கள், ''இது அனைவருக்கும் பொருந்தும்'' என தெரிவித்ததாக செய்திகள் பரவின.
இதனை அறிந்த ஓபிஎஸ் அவர்கள், உடனடியாக தனது முகநூல் பக்கத்தில், ''டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல்.18 MLAக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்'' என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.