ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.! பிரச்சாரத்தில் அனைத்தையும் வெளிப்படையாக கூறிய ஓ.பன்னீர்செல்வம்.!! கலக்கத்தில் ஸ்டாலின்.!!! - Seithipunal
Seithipunal


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். திருப்பூர் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசியவை, புரட்சித் தலைவி அம்மா ஏழை-எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று அந்த வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றி வருகிறது.

மக்களுக்காக பாடுபடும் அதிமுக அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. திமுக ஆட்சியில் மின்தடை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் தெழிலாளிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இன்றும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் இன்று எங்கும் மின்தடையே கிடையாது. மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். கனவு காண்கிறார். அவரது முதல்வர் கனவு பலிக்க போவது கிடையாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops says about mk stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->