சற்றுமுன்: நேரடியாக களத்தில் இறங்கிய துணை முதல்வர்! ஆய்வுக்கு பின் அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


கஜா புயல் காரணமாக  நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. 

குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றார். தமிழக அரசும் போதிய நிவாரணம் வழங்கவில்லை என்றும், அரசின் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை எனவும் பலர் புகார் எழுப்புகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு, சமூக நல அமைப்புகளும், இளைஞர்களும் தானாக முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

மேலும், கந்தர்வகோட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் காரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு காவல் துறையினர்  துணை முதலமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பிவைத்தனர்.

இதன் பின், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தஞ்சையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியவை, கஜா புயல் 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தையும், மற்ற 6 மாவட்டங்களில் மிதமான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2,432 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 592 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,170 கி.மீ. சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று  துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->