பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்... அமித் ஷாவுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை.!!
ops meeting with amit shah
மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். பிரதமர் மோடி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று வாரணாசியில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோட்ஷோ நடத்தினார்.
இந்த ரோட்ஷோவில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் வழிநெடுக மலர் தூவி, மோடியை வரவேற்றனர். இதையடுத்து இன்று மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வாரணாசியில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவுடன், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் தம்பிதுரை, வேலுமணி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
English Summary
ops meeting with amit shah