வெடித்தது சர்ச்சை : ஓ.பி.எஸ்ஸை சாடிய எடப்பாடி அணியினர்.....அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மோதல்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தண்டலம் எனும் பகுதியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் போன்றோர் தலைமை வகித்தனர். 

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க செயல்பாடுகள் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது தங்களுக்கு எந்த விதமான முன்னுரிமையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் அளிப்பதில்லை என்றும், அனைத்து துறைகளிலுள்ள ஒப்பந்தங்களையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் கூறி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். 

இதன் காரணமாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸை மிகக் கடுமையாக சாடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பேசினர். இத்தகைய இரு தரப்புக்களுக்கிடையே ஏற்பட்ட இப்பேச்சுகளால் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

இதனையடுத்து அமைச்சர்கள் தலையிட்டு, சமாதானம் செய்ததால் இரண்டு தரப்பினரும் அமைதி காத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops eps supporters fight in meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->