ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க. EX எம்.எல்.ஏ.! தினகரன் கட்சியில் இணைந்தார்!
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க. EX எம்.எல்.ஏ.! தினகரன் கட்சியில் இணைந்தார்!
நாகர்கோவில் தொகுதியில் கடந்த 2011 - 2016 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நாஞ்சில் முருகேசன். 2016 சட்டசபை தேர்தலிலும் இவர், நாகர்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால், அவருக்கு கட்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொறுப்பு அ.தி.மு.க. வழங்கியது.
இந்நிலையில் அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் புதியதாக நியமித்தனர். இதில், நாஞ்சில் முருகேசன் வகித்து வந்த அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு நாஞ்சில் முருகேசன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேரப்போவதாக தகவல்கள் பரவியது. இதற்கு நாஞ்சில் முருகேசன் மறுப்பு தெரிவித்தார்.
நாஞ்சில் முருகேசன் இன்று திடீரென தஞ்சாவூர் சென்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்து. பிறகு டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர்ந்தார். இந்நிகழ்ச்சியில், அ.ம.மு.க. தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா மற்றும் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் என்ஜினீயர் லெட்சுமணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.