ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களின் வழக்கு விசாரணை ஆரம்பமானது.!! - Seithipunal
Seithipunal


முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் முதல்- அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்றார். 

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், தர்மயுத்தம் ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டது. அந்த சமயத்தில் தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. 

இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த போதிலும், அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

பின்னர் தர்மயுத்தத்தை முடித்துக்கொண்ட ஓபிஎஸ் அணியும், பழனிச்சாமி தலைமையில் ஆன அணியும் ஒன்றாக இணைந்து அதிமுக கட்சியையும், சின்னத்தையும் தங்கள் வசப்படுத்தினர்.

இந்த நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் விசாரணை செய்த நீதிபதிகள், திமுக மற்றும் தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதை அடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த வழக்கின் விசாரணை இனி தொடர்ந்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS AND 11 MAL CASE START


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->