ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் திடீர் திருப்பம்.!! உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு.!!
ops 11 mla case new appeal in dmk side
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் முதல்- அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்றார்.
முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், தர்மயுத்தம் ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டது. அந்த சமயத்தில் தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த போதிலும், அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
பின்னர் தர்மயுத்தத்தை முடித்துக்கொண்ட ஓபிஎஸ் அணியும், பழனிச்சாமி தலைமையில் ஆன அணியும் ஒன்றாக இணைந்து அதிமுக கட்சியையும், சின்னத்தையும் தங்கள் வசப்படுத்தினர்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் விசாரணை செய்த நீதிபதிகள், திமுக மற்றும் தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதை அடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இறுதி விசாரணையை தொடங்கி உள்ளது.
இதற்கிடையே, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது, பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் கண்டிப்பாக வந்துவிடும். ஏனெனில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு மைனாரிட்டி ஆட்சி. இந்த ஆட்சியை மத்தியில் உள்ள பாரதிய ஜனதா ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்ட சபையில் ஓபிஎஸ் அணியினர் 11 பேர் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதை அனைவரும் அறிவார்கள் என்று நினைக்கின்றேன்.
அந்த 11 எம்எல்ஏக்கள் பதவி செல்லுமா? செல்லாதா? என்பது பிப்ரவரி முதல் வாரத்தில் தெரிந்துவிடும் என்பதால் அப்போது நிச்சயமாக தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது. இதை நான் சொல்வதால் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் காண்பது கனவா நினைவா என நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அவர் பேசினார்.
இந்நிலையில், 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி முன்பு திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்து உள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு இந்த வாரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
English Summary
ops 11 mla case new appeal in dmk side