வெளிநாட்டில் பல ஆயிரம் கோடி சொத்து?- பதறியடித்து ஓடிய பன்னீர்..!!
வெளிநாட்டில் பல ஆயிரம் கோடி சொத்து?- பதறியடித்து ஓடிய பன்னீர்..!!
வெளிநாட்டில் பல ஆயிரம் கோடி சொத்து?- பதறியடித்து ஓடிய பன்னீர்..!!
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநாட்டில் தனக்கு சொத்து இருப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் முதலீட்டாளர்களிடம் பேச்சு வார்த்தை நடந்தி வருகிறார்கள். அந்த பணிகள் துரிதபடுத்தப்படும். அரசின் விருதுகளுக்கு முறையாக உரிய தகுதி உடைய நபர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் மதிப்பெண்கள் போடப்பட்டு, அதன் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
டி.டி.வி.தினகரன் கட்சி தொடங்குவது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும். வெளிநாடுகளில் எனக்கு சொத்து உள்ளது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை என்றார்.
English Summary
o panneer selvam speech about own property