தேர்தல் ஆணையம் கூறியதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த திமுகவினர்.!!
no raid for thoothukudi
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட்டுள்ளார். தூத்துக்குடியில் அவர் தங்கியிருந்த விடுதியில் கடந்த 16ஆம் தேதி காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வாக்குபதிவு இரண்டு நாட்கள் முன்பு நடந்த இந்த திடீர் சோதனையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இது ஒரு ஜனநாயக படுகொலை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில் கனிமொழி தங்கியிருந்த விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. இது வெறும் ஒரு சரிபார்த்தல் நடவடிக்கையை மட்டுமே என கூறிய தேர்தல் ஆணைய இயக்குனர் திலிப் சர்மா, வருமான வரி சட்டப் பிரிவு 131-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.