வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி...நாயனாரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை! - Seithipunal
Seithipunal


வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார்.

இந்துக்கள் கடவுளாக வழிபடும், ஆண்டாள்  குறித்து கவிஞர் வைரமுத்து தவறுதலான கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்துக்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது :
 
இந்து கடவுளை கொச்சைப்படுத்திய வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர். வருங்காலங்களில் இந்துக்களை பழித்து பேசினால் கொலைசெய்யவும் தயாராகுங்கள்" என பேசிஉள்ளார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

அ.தி.மு.க வில் அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன், அக்கட்சியில் ஓரங்கட்டப்பட்டதை அடுத்து பா.ஜ.க வுக்குத் தாவினார். வெறுப்பை கக்கும் அநாகரிகப் பேச்சு பேசினால் பிரபலமாகி விடலாம் என்ற கலாச்சாரம் பா.ஜ.க.வில் தற்போது மேலோங்கியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் தனது இயல்புக்கு மாறாக இப்படி பேசியிருப்பது கவனிக்கத் தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nainar nagendran hatred speech against vairamuthu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->