" உலகில் அதிகம் பொய் சொல்பவர் மோடி" தான்..நடிகர் கருணாஸ் பரபரப்பு குற்றசாட்டு.!!
Most lying speak to modi actor karunas
இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்குலத்தோர் புலிகள் படை கட்சியின் தலைவர் கருணாஸ் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் எடுப்பட்டார்.
நடிகர் கருணாஸ் பேசுகையில், படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாய தாமரை குளத்துக்கு கேடு, மோடியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு. உலகில் அதிகம் பொய் சொல்பவர்கள் போட்டி வைத்தால் மோடிதான் முதலிடம் பிடிப்பார் என்று பேசினார்.
English Summary
Most lying speak to modi actor karunas