தர்மபுரியில் மூட்டை மூட்டையாக பணம்! யாருடையது தெரியுமா?!
money in harur govt bus
தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரூர் சட்டமன்றத் தொகுதியில் தற்பொழுது மக்களவை தேர்தல் உடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதிக்குட்பட்ட அரூரில் சற்று முன் சென்ற அரசு பேருந்தில் மூட்டைகளில் கட்டப்பட்ட பணம் கேட்பாரற்று கிடந்தது. இதனை கவனித்த அப்பேருந்தின் நடத்துனர் செல்வராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, பின்னர் கோட்டபட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
ஒப்படைக்கப்பட்ட அந்த ஏழு மூட்டைகளில் 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வேலூர், நங்கநல்லூர், இன்று காலை பெரம்பலூரில் விசிக கட்சியினர் கார் என அடுத்தடுத்து பணங்கள் கோடிக்கணக்கில் சிக்கிய நிலையில் தற்போது கேட்பாரற்ற நிலையில் தர்மபுரியில் கிடைத்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.