இ.பி.எஸ். ஆட்சிக்கு முடிவுகட்ட நேரம் குறித்த ஸ்டாலின்! அச்சத்தில் அ.தி.மு.க! - Seithipunal
Seithipunal


கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடக்கோாி உத்தரவிடக்கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்திக்க உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரங்கள் குறித்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் இந்த சம்பவத்தில் தொடா்புடைய சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை சென்னை போலீசார் நேற்று டெல்லியில் கைது செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும், அவர் இது தொடர்பாக 5 நபர்களை கொலை செய்திருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ தெரிவித்தார். 

முதலமைச்சர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது கோடநாடு விவகாரம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin will meet governor banwarilal purohit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->