ராகுல்காந்தியை விட்டு, விட்டு 3-வது அணிக்கு செல்லும் முக ஸ்டாலின்? கலக்கத்தில் காங்கிரஸ்!
MK Stalin will go to 3rd team
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திண்டுக்கல் அருகே மாரம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டார். அவர் அப்போது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியவை,
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நிலுவைத் தொகை மற்றும் கஜா புயல் பாதிப்புகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் எதுவும் மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருவதால் என் மீது பா.ஜ.க. அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் குறை கூறிவருகிறனர்.
மேலும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதற்கு எதிரான நிலையில் உள்ள மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்திற்கு கலந்துகொள்கிறார். இதன் மூலம் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மு.க.ஸ்டாலின் 3-வது அணிக்கு விரைவில் சென்று விடுவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
English Summary
MK Stalin will go to 3rd team