உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு திமுகதான் காரணமா? மு.க.ஸ்டாலின் விளக்கம்!
mk stalin press meet in today
நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த போது ஸ்டாலின் கிராமத்திற்கு செல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், கொடநாடு விவகாரம் தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளதாகவும், அதன் முடிவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நேரடியாக அரசியலில் எதிர்கொள்ள முடியாதவர்கள் இது போன்ற குறுக்குவழியை கையாண்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கூறியவை, நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது என திமுக வழக்கு தொடரவில்லை, முறையாக நடத்தவேண்டும் என்றே வழக்கு தொடர்ந்தோம் என்று கூறினார்.
English Summary
mk stalin press meet in today