#BREAKING சற்றுமுன் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள்.!!
#BREAKING சற்றுமுன் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள்.!!
வரும் 16-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உருவ சிலை திறக்கப்பட உள்ளது. சிலை திறப்பு விழா முடிந்த உடன், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் 16-ம் தேதி அண்ணா அறிவாலய வளாகத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா, திமுக பொது செயலாளர் க.அன்பழகன் முன்னிலையிலும், முக ஸ்டாலின் தலைமையிலும் நடக்கவுள்ளது. கருணாநிதி, அண்ணா சிலை-களை தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். விழா முடிந்த உடன் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களும், தோழமை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், சற்றுமுன் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ''கருணாநிதி சிலை திறப்பு விழா அன்று, இடவசதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அண்ணா அறிவாலயத்திற்கு வருவதை மக்கள், நிர்வாகிகள் தவிர்த்து ஆண்டு மாலை அனைவரும் ஒய்எம்சிஏ திடலுக்கு வர வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
English Summary
MK STALIN NEW ANNOUNCEMENT FOR DMK PEOPLE