யாருக்கு என் ஆதரவு.! முக அழகிரி பரபரப்பு பேட்டி.!!
MK AZHAGIRI TALK ABOUT ELECTION
வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு தனது ஆதரவு என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனுமான முக அழகிரி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், திமுக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பின், திமுகவில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட முக அழகிரி அவர்கள் மீண்டும் கழகத்தில் இணைக்க அழைக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் திமுகவின் தலைவராக முக அழகிரி வரவேண்டும் என்று மதுரையை சேர்ந்த அவரின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் திமுகவின் தலைவராக மு க ஸ்டாலின் ஏகோபித்த ஆதரவுடன் பதவியேற்றார்.
பதவி ஏற்ற பின்பு முக அழகிரி அவர்கள் திமுகவில் இணைவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். அது அனைத்துமே தோல்வியில் முடிந்தது.
வரும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் முக அழகிரி ஆதரவு யாருக்காக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அவரின் கருத்து என்னவாக இருக்கும் என்றும், அனைத்து கட்சிகளும் பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருந்தது.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஒருவாரத்தில் தெரிவிப்பேன் என்று முக அழகிரி தெரிவித்துள்ளார்.
English Summary
MK AZHAGIRI TALK ABOUT ELECTION