அமைச்சர் செல்லூர் ராஜு ஓபன் டாக் .! அப்துல்கலாமுக்கே அதிமுக தான் முன்னோடியாக திகழ்ந்தது.!!
அமைச்சர் செல்லூர் ராஜு ஓபன் டாக்.! அப்துல்கலாமுக்கே அதிமுக தான் முன்னோடியாக திகழ்ந்தது.!!
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, அவ்வப்போது நெட்டிசன்களுக்கு தீனி போடும் அளவிற்கு, அறிவிப்புகளை அள்ளி வீசுவார். அதே போன்று, ஒரு சில நேரங்களில், சிரிப்பு வரவழைக்கும் விதமான செயல்களையும் செய்வார். வைகை ஆற்றில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க, தெர்மோகோல் வாங்கி ஆற்று நீரை மூடியதால், இவர் நெட்டிசன்களால்தெர்மோகோல் ராஜு என்ற சிறப்பு பெயரை பெற்றார்.
இந்த சூழ்நிலையில், மதுரையில் எம்ஜிஆர் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார். அப்போது இளைஞர்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம். ஆனால் அவருக்கு முன்னதாகவே இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது அதிமுக தான் என்று கூறினார்.
மேலும், அதற்கு நானே ஒரு சாட்சி என்று கூறிய அவர், சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு, அமைச்சர் பதவி வரை அளித்தது அதிமுக தான் எனவும், அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம் அதற்கு முதல்வரும் துணை முதல்வருமே சாட்சி எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், திமுகவில் 60 வயது வரை ஸ்டாலின் தான் இளைஞரணி தலைவர். அடுத்து அவர் மகனை இளைஞரணியின் பதவிக்கு கொண்டுவர பார்க்கிறார், எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளிப்படையாக பேசினார்.
English Summary
minister sellur raju open talk