இதோ வந்துட்டாரே! ரஜினி சொன்னதை வைத்து பார்த்தால் அவரது ஆதரவு எங்களுக்கே! சொன்னது யார் தெரியுமா!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முன்கூட்டியே உறுதியான இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக இன்று தனது வீட்டில் ஆலோசனை நடத்திய அவர், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துவிட்டார். 

மேலும் வேறு எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் என்னுடைய மன்ற கொடியையும், பெயரையும் எந்த கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய இலக்கு அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கடுத்தபடியாக யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர், வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்திரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல் படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் நாடு... ஜெய்ஹிந்த் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து பேட்டியளித்த தமிழக அரசின் வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார், ரஜினிகாந்தின் அறிக்கையை வைத்து பார்க்கும் போது அவருடைய ஆதரவு எங்களுக்கு தான் என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் கோடைகாலங்களில் கூட அதிமுக அரசு தான் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பது தொடர்பாக அதிமுக தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்த்துள்ளார்.

 இன்னும் எத்தனை பேர் இந்த ஆதரவு வரிசையில் வருவார்களோ என தெரியவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister rb uthayakumar said rajini support to admk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->