அவரை மீறி எங்களை மிரட்டுங்கள் பார்க்கலாம்... அதிமுகவை இயக்குபவரின் விவரத்தை போட்டுடைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ..!!
அதிமுக-வுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக-வுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியான அதிமுகவில் நிலவும் கோஷ்டி போக்குகளால் தமிழ்நாட்டு மக்களின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி இணைப்பிற்கு பின்னாலும் தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர். தினகரன் அணி மூன்றாவது அணியாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாத நிலையில், ஆளும் கட்சியின் கவனம் முழுவதும் சொந்த கட்சி பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்திட நேரம் போதாத நிலையில் இருந்து வருகின்றனர்.
அனைத்து துறைகளிலும் என்றுமில்லாத அளவிற்கு ஊழல் பெருக்கெடுத்து வெள்ளமென பாய்கின்றது. ஆளும் கட்சியின் கோஷ்டி சண்டை என்றைக்கு முடிவுக்கு வரும் எப்போது மக்கள் பிரச்சனைகள் தீரும் என்ற மிக மோசமான நிலை நீடித்து வருகின்றது.
இந்த நிலையில் அதிமுகவுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரச்சனையை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை. அவருக்கு கட்சி தான் முக்கியம் போல. மேலும் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது என்று பெரியகுளத்தில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
English Summary
What's wrong in aligning with BJP, asks AIADMK minister