தேர்தல் நெருங்கும் சமயத்தில் கான்சுரிங் படத்தை எதிர்க்கட்சியினர் சீரும் சிறப்புமாக வெளியிடுவார்கள்.! அமைச்சர் ஜெயக்குமார் அல்டிமேட் அதிரடி.!!
minister jayakumar talks about MLA election
தமிழகத்தின் ஆட்சியை வரும் நாடாளுமன்ற தேர்தலிலும்., சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவதற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில்., அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களின் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்., மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது., வரும் 2021 ம் வருடத்தின் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற நினைத்து அதற்க்கான செயல்களை செய்து வருகிறார்., இவரின் ஆசை என்றைக்குமே நிறைவேறாத ஆசையாக இருந்து விடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே., அவரின் ஆசைக்கு அவரது கட்சியினரே ஒத்துழைக்கமாட்டார்கள்.
எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அவரது ஆட்சி காலத்தை நிறைவு பெற்ற பின்னரே., தேர்தல் நடைபெற வேண்டும் என்று விரும்புவார்கள். இறந்தவர்களை வைத்து அரசியல் நடத்தி., குற்றசாட்டை சுமத்தி அதனை தற்போது வேடிக்கையாகவும்., வேடிக்கையாகவும் மாற்றி விட்டனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவர்கள் திரைப்படத்தை போன்று திகில்., திரில் மற்றும் சஸ்பென்ஸ் வைத்து படம் காட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
English Summary
minister jayakumar talks about MLA election