கோடநாடு விவகாரத்தில் திமுக தான் : பின்னணியில் இருக்கிறது! ஒட்டுமொத்த உண்மையும் போட்டுடைத்த தமிழக அமைச்சர்!!
minister jayakumar Talk about kodanadu
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரங்கள் குறித்த வீடியோ ஒன்றை பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும், அவர் இது தொடர்பாக 5 நபர்களை கொலை செய்திருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் கொதித்தெழுந்தன. மேலும், இதில் சம்மந்தப்பட்ட முதல்வர் பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என முக ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். இதையடுத்து டெல்லி சென்ற தமிழக காவல் படை, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை கைது செய்தது.
இதையடுத்து, சயான் மற்றும் மனோஜ்க்கு நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், கொடநாடு விவகாரத்தில் கைதான சயன், மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும், ஜாமின் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டி உள்ளார்.
English Summary
minister jayakumar Talk about kodanadu