தினகரன் ஒரு மண் குதிரை, அவரை நம்பி யார் சென்றாலும்...?. - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி !!
தினகரன் ஒரு மண் குதிரை, அவரை நம்பி யார் சென்றாலும் செந்தில் பாலஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான் - ஜெயக்குமார்
சென்னையில் நாளை காலை 11.30 மணிக்கு அ.ம.மு.க கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் இணைய உள்ளதாக தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்ததில் சூழ்ச்சி, சதி இருக்கிறது. தினகரன் ஒரு மண் குதிரை, அவரை நம்பி யார் சென்றாலும் செந்தில் பாலஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான் எல்லோருக்கும் என்றார்.
மேலும், பிரிந்து சென்றவர்களில் தினகரனை தவிர யார் வந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
English Summary
Minister Jayakumar Press Meet About Senthilbalaji