வேலூர்: தேர்தல் ஒத்திவைப்பு? வெளியான பரபரப்பு தகவல்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்.!!
may be vellore election postponed
துரைமுருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சனிக்கிழமை இரவு வரை நடத்திய சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.
இதன்தொடர்ச்சியாக, திமுக விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, அவரின் சகோதரி விஜயாவின் சிமெண்ட் கிடங்கில் இருந்து சாக்கு மூட்டை மற்றும் அட்டைப் பெட்டிகளில் இருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள், வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது சம்மந்தமாக வெளியான காணொளியில், வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் கொடுக்க, லிஸ்ட் போட்டு கட்டு காட்டாக கட்டி வைத்திருக்கும் காணொளி, தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுக தயாராக இருந்துள்ளதை இந்த காணொளியை பார்க்கும் போதே தெரிகிறது.
இதன் காரணமாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டியில், ''வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நிறுத்தப்படுமா அல்லது நடத்தப்படுமா என்பது குறித்த இறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும்'' என்று அறிவித்தார்.
வெளியான காணொளி:
இதற்கிடையே, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வேலூரில் துரைமுரகன் வீடு மற்றும் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்த முழு அறிக்கையையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார்.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை முக்கிய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து உள்ளதாகவும், அந்த கூட்டம் முடித்து, வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வரும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. இது திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
may be vellore election postponed