சாக்கடையால் நடந்த கொலை! அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!
சாக்கடையால் நடந்த கொலை! அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே குடியிருப்பவர் வேல்சாமி (வயது 50). இவர்கள் இருவரது வீட்டின் முன்பாக, கழிவு நீர் சாக்கடை ஓடுகிறது.
இந்த சாக்கடை நீர் அவ்வப்போது, அடைத்துக் கொண்டதால் அது தொடர்பாக, இந்த இருவருக்கும், சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது. இது காலப் போக்கில் முன் விரோதமாக மாறியது. கடந்த 2008-ஆம் ஆண்டு, இது மாதிரி கழிவு நீரை வெளியேற்றுவது தொடர்பாக மறுபடியும், தகராறு எழுந்துள்ளது. அந்த வருடம் ஜுலை 17-ஆம் தேதி, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின், ராமசாமி, வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டார். ஆனால், ஆத்திரம் அடைந்த வேல்சாமி, ராமசாமி வேலை பார்த்த இடத்திற்கே சென்று, அவரை இரும்புக் கம்பியால், சராமரியாகத் தாக்கி உள்ளார். இதனால், ராமசாமி படுகாயம் அடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராமசாமி இறந்து போனார்.
இதனால், திருத்தங்கல் போலீசார், வேல்சாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடா்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று, நீதிபதி முத்து சாரதா அறிவித்தார். அதன் படி, ராமசாமியைக் கொன்ற வேல்சாமிக்கு சிறையில் ஆயுள் தண்டனை மற்றும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
English Summary
man got life time jail to killed his neibhour for trainage issue