எங்கள் சாமிகளை இழுவுபடுத்தும் திமுக ஓட்டு கேட்டு வராதீங்க.! நெத்தியடி அடிக்கும் மக்கள்.!!
MADURAI PEOPLE AGAINST DMK
வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், திராவிட கட்சி தலைவர்களையே முதல் முறையாக, நான் இந்துக்களுக்கு எதிரியானவன் இல்லை என்றும், வன்னியர்களுக்கு எதிரானவன் இல்லை என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பான திராவிட கழகம், இந்து மத கடவுள்களை மட்டும் விமரிசிப்பதில் தவறுவதில்லை. இவர்களுக்கு இந்துக்கள் பொதுவாக வைக்கும் ஒரு முக்கிய கேள்வி, கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களில் மூடத்தனம் அறவே இல்லையா? இதுநாள் வரை ஒருமுறை கூட, கிருஸ்துவ, இஸ்லாமிய மத கடவுள்களை விமர்சனம் செய்யாதது ஏன்?., இதற்கு திக தலைவர்களிடம் எந்த பதிலும் கிடையாது.
இதற்கிடையே திக தலைவர் கீ வீரமணி பகவான் கிருஷ்ணரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து பேசியது தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து வந்த திமுகவிற்கு, வழக்கம் போல திக ஆதரவு தெரிவித்து இருப்பதால், எங்கு இந்துக்களின் ஓட்டு நமக்கு எதிராக விழுந்து விடுமோ என்று அஞ்சி, நேற்று வரை இது பெரியார் பூமி, நாம் எல்லாம் திராவிடர்கள் என்று கூறி வந்த திராவிட தலைவர் முக ஸ்டாலின் வாயில் இருந்து, நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை என்ற சொல் வெளிவந்தது.
மேலும் வீரமணிக்கு ஒரு கண்டனத்தையும் பேருக்கு கொடுத்தார். இருப்பினும், திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்று வீரமணிக்கு இந்து மக்கள் கல் வீசியும், செறுப்புகளை வீசியும் தங்களது வரவேற்பை திருச்சியில் கொடுத்தனர்.
இந்நிலையில், மதுரையில் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தபாடி பகுதியில், திமுக கூட்டணியினரை, ஓட்டு கேட்டு வர வேண்டாம் என 500க்கும் மேற்பட்ட குடும்பம் தங்களது வீட்டு கதவுகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளதால், திமுகவின் உடன்பிறப்புகள் கலக்கத்தில் உள்ளனர்.
English Summary
MADURAI PEOPLE AGAINST DMK