ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடாத கல்நெஞ்சுக்கார வேட்பாளர்.! திட்டி தீர்த்த பொது மக்கள்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்பாலான தேர்தல் பிரச்சாரங்கள் மக்கள் அதிகம் கூடும் பிரதான சாலைகளிலேயே நடக்கிறது. அரசியல் கட்சி வேற்பாளர்கள் பிரச்சாரம் செய்து முடிக்கும் வரை வாகன போக்குவரத்து நெரிசல் அதிமாகி, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் வாகனங்களும் இதில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில், திமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசன், மதுரை, மேலூர் அழகர் கோயில் சாலையில் வாக்கு சேகரித்தார். 

அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அவசரமாக செல்ல முற்பட்டபோது, அந்த வாகனத்திற்கு வழி விடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் வெங்கடேசன் செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், ஒரு உயிர், உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை இப்படி பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறாரே என்று சாடினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai dmk alliance candidate election campaign issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->